சென்னை: மத்திய அரசுக்கு எதிராக 8ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இடதுசாரி கட்சிகள் சார்பாக கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச நலனுக்கு விரோதமான கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஜனவரி 8ம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.