பெரம்பூர்: இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று 15 சவரன் நகைகளை பறித்து தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மனைவி பஷீரா பானு (20). இருவரும் நேற்று முன்தினம் இரவு உறவினர் இல்ல திருமணத்தில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினர். பின்னர், 9.30 மணிக்கு மாமியாருக்கு டிபன் வாங்குவதற்காக பஷீரா பானு, முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ பகுதிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மூதாட்டி சாலையை கடக்க உதவி செய்யும்படி கூறியதால், பஷீரா பானு மூதாட்டியின் கையை பிடித்துக்கொண்டு முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ சாலையில் இருந்து தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையை கடந்து மறுபக்கத்தில் விட்டுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஆட்டோவில் தன்னை ஏற்றிவிடும்படி மூதாட்டி கூறியுள்ளார். அதன்படி, பஷீரா பானு மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றியபோது, அதில் இருந்த 4 பெண்கள், திடீரென பஷீரா பானு வாயை பொத்தி ஆட்டோவில் கடத்தினர்.