மத்திய அரசு மீது அவதூறு ஏற்படுத்த முயற்சி : ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘பொருளாதார பிரச்ைன தொடர்பாக மத்திய அரசு மீது அவதூறு ஏற்படுத்த பலர் முயற்சிக்கின்றனர்’’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் வர்த்தகர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில், “நாட்டில் பொருளாதார சரிவு என்பது சர்வதேச பொருளாதார மந்த நிலையின் ஒரு பகுதியாகும். இந்தியாவை காட்டிலும் வளர்ந்த நாடுகளே இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.  பொருளாதார பிரச்னை விவகாரத்தில் பல்வேறு தரப்புக்கள் மத்திய அரசின் மீது அவதூறு ஏற்படுத்த முயற்சிக்கின்றன. ஆனால் மத்திய அரசானது விவசாயிகள் நலனை புரிந்துகொண்டுள்ளது. அதனை நோக்கி பணியாற்றுகிறது” என்றார்.

Related Stories: