திரிபோலி: லிபியாவில் ராணுவ பள்ளி மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து உள்ளனர். லிபியாவில் பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரி மோமெர் கடாபி, கடந்த 2011ம் ஆண்டு கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்தது. முன்னாள் ராணுவ தளபதி கலீபா கப்தார் தலைமையிலானோர் லிபியா தேசிய இடைக்கால பேரவையின் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். தலைநகர் திரிபோலியை கைப்பற்றுவதற்காக கடந்த ஏப்ரல் முதல் கலீபா கப்தார் தலைமையிலான குழு தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.