தோல்வி அடைந்த வேட்பாளர் விரக்தி போஸ்டர் ‘இப்படி துரோகம் செய்வீர்கள் என கனவிலும் நினைக்கவில்லை’

திருவில்லிபுத்தூர்: ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சில  வேட்பாளர்கள் தங்கள் ஆதங்கத்தை போஸ்டர் அடித்து வெளிப்படுத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே  அத்திக்குளம்-செங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு காசி என்பவர் போட்டியிட்டார். இவர் தோல்வியடைந்தார்.  இதனால் விரக்தியடைந்த காசி, வாக்காளர்களுக்கு வினோதமாக நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.  அதில், ‘‘என்னை  தோல்வியடைய செய்த வாக்காளர்களுக்கு நன்றி... நான் உங்களை நம்பினேன்... நீங்கள் இப்படி துரோகம் செய்வீர்கள் என கனவில் கூட  நினைக்கவில்லை...’’  என எழுதியுள்ளார்.

இவர் ஏற்கனவே இந்த பகுதி பஞ்சாயத்து  தலைவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதேபோல் அத்திகுளம்-தெய்வேந்திரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு பிரிதிவிராஜன் என்பவர் போட்டியிட்டார். இவரும் தேர்தலில் தோல்வியடைந்தார். இவர் அடித்துள்ள போஸ்டரில், ‘‘பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு  வாக்களித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி’’ என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களது போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Related Stories: