8ம் தேதி நடக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு: திமுக அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஆண்டொன்றுக்கு 2 கோடி பேர் வேலையிழந்து வரும் சூழலை வஞ்சகமாக திணித்துள்ளது பாஜக. அரசு- தொழிலாளர்களின் வயிற்றில் ஈவு இரக்கமின்றி அடித்து வருவது கோடிக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும்  ஆபத்தாக மாறியிருக்கிறது.   தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி, அவர்களுக்கான சலுகைகளைப் பறித்து - அவர்களின் எதிர்காலத்தை இருட்டில் தள்ளி - முதலாளிகளின் அரசாக மட்டுமே திகழ வேண்டும் என்று மத்திய பாஜக அரசு விரும்புவது மன்னிக்க முடியாத  துரோகம். எனவே 8ம் தேதி நடக்கும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கிறது.

 ஆகவே காலம் இப்போதும்கூடக் கடந்து போய்விடவில்லை. போராட்டம் அறிவித்துள்ள பத்துக்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்க பிரதிநிதிகளை, மத்தியத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார்  உடனடியாக அழைத்துப் பேசி- தொழிலாளர்கள் முன்வைத்துள்ள 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி ஒரு சுமூகத் தீர்வு காண பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: