விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம், விளாங்காட்டூர் ஊராட்சியில் 2 ஆயிரத்து 294 வாக்குகள் பதிவானது. இதில் தலைவர் பதவிக்கு பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வீரமுத்துக்கு 776 வாக்குகளும், ஏணி சின்னத்தில் போட்டியிட்ட பாலகிருஷ்ணனுக்கு 703 வாக்குகளும் கிடைத்தது. இதையடுத்து வீரமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற வீரமுத்து காத்திருந்த போது, திடீரென 703 வாக்குகள் பெற்ற பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமுத்து கேட்டபோது எங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்கள் நீதிமன்றத்தை நாடுங்கள் என அலட்சியமான பதிலை தேர்தல் அதிகாரியான வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி தெரிவித்துள்ளார்.