மாதனூர்: மாதனூர் அடுத்த குருவராஜ பாளையத்திற்கு அருகில் உள்ள சின்னப்பள்ளி குப்பம் கிராமம் மற்றும் குப்பம்பாளையம் கிராமங்கள் உள்ளது. அங்கு சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிறந்து, வளர்ந்து படித்த 2 பேர் கலெக்டர்களாகி உள்ளனர். இதில் மகேஷ்வரன் சென்னை தமிழ்நாடு வடிகால் வாரியத்திலும் மற்றொருவரான குமார் பெங்களூருவில் கலெக்டராகவும் பணியாற்றி வருகின்றனர். இப்படி பெயர் பெற்ற இந்த கிராமத்தில் மக்களின் பயன்பாட்டுக்காக சுடுகாடு உள்ளது. ஆனால் அங்கு செல்வதற்கான வழியில்லை.