ஊராட்சி தலைவரான 84 வயது மூதாட்டி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், நாயுடுமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் மாணிக்கம்மாள்(84), வசந்தி(39). இவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் மூதாட்டி மாணிக்கம்மாள் 764 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். தள்ளாத வயதிலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தேர்தலில் நின்று வெற்றி பெற்ற மூதாட்டி மாணிக்கம்மாளுக்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: