மேட்டுப்பாளையத்தில் திமுக-அதிமுகவினர் கைகலப்பு

மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் நள்ளிரவு தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் தேவையில்லாமல் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் நுழைந்ததாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக தி.மு.க., அ.தி.மு.க.வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர். கைகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது பெண் போலீஸ் ஒருவர் கீழே விழுந்தார். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்தவர்களை விரட்டினர்.

Related Stories: