சென்னை: பிணம் தின்னும் அரசியல் நடத்திய பாஜவினருக்கு, ஊருக்கு உபதேசம் செய்ய எந்த தகுதியும் இல்லை என்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திமுகவும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். விரக்தியின் விளிம்பிலும், வீழ்ச்சிப் பள்ளத்திலும் இருந்து கொண்டு பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.