லக்னோ; அரசியலமைப்பு முன்னுரையுடன் உத்தர பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோருக்கு பிரியங்கா காந்தி புத்தாண்டு வாழ்த்து கடிதம் அனுப்பி வருகிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தீவிரமாக போராடி வருகிறார். இதை வலியுறுத்தும் விதமாக அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றுள்ள முன்னுரையை போராட்டத்தின்போது வாசித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கு அவர் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார்.