சிலிகுரி: ‘இந்தியாவை ஏன் எப்போதும் பாகிஸ்தானுடன் ஒப்பிடுகிறீர்கள்?’ என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த பேரணியில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட மக்கள் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என்பது அவமானமாக இருக்கிறது. இந்தியா கலாச்சாரம், பாரம்பரியமிக்க மிகப்பெரிய நாடு. பிரதமர் மோடி தொடர்ந்து இந்தியாவை ஏன் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசுகிறார்? நீங்கள் இந்திய நாட்டுக்கு பிரதமரா? அல்லது பாகிஸ்தானுக்கு தூதரா? ஏன் அனைத்து விவகாரத்திலும் பாகிஸ்தானை குறிப்பிடுகிறீர்கள்.