சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்த காயத்திரி என்ற ஆராய்ச்சியாளர் அப்பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோலம் போட்டதற்காக கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டார். தற்போது ஆராய்ச்சியாளர் காயத்ரி மீது பொய் வழக்கு போடுவதற்கு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆராய்ச்சியாளர் காயத்திரி ஒரு அமைப்பின் மூலமாக பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாத்தை நிராகரிக்கும் மக்கள் மீது அந்தந்த அரசுகள் காட்டும் பாரபட்சம் பற்றியே அவரது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் உள்ள 80 பக்கங்களில் எந்த பக்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவானது என்பதை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.