சென்னை: வாலிபரிடம் செல்போன் பறித்த கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சூளை கண்ணப்பர் திடல் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (22). தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் சூளை பகுதி சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள், ஆனந்தை வழிமறித்து, அவரது செல்போனை பறித்தனர். அதிர்ச்சியடைந்த ஆனந்த், திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். உடனே அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, அந்த 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, பெரியமேடு போலீசில் ஒப்படைத்தனர்.