பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை

கோபி: பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொடிவேரி தடுப்பணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட, வெளி மாநில சுற்றுலா பயணிகளும் குளிக்க வருகின்றனர். நீர் திறப்பு குறைந்தாலும், கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. இதனால் தடை நீட்டிக்கப்பட்டது. இது தெரியாமல் வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள், பவானி ஆற்றின் உயர்மட்ட பாலத்தில் நின்று, தடுப்பணையில் கொட்டிச் செல்லும் தண்ணீரின் அழகை ரசித்து சென்றனர். ஐயப்ப பக்தர்கள், குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories: