சென்னை: தபால் வாக்கு அளிக்க அனுமதி அளிக்காத அதிகாரிகளை கண்டித்து பெரியபாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூண்டி, எல்லாபுரம் ஒன்றியத்தில், 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்காக முன்கூட்டியே சென்றனர். அப்போது, தேர்தல் முடித்துவிட்டு வந்த பிறகு தபால் ஓட்டு போடலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் 2 கட்ட தேர்தல் முடிந்த பிறகு நேற்று அங்கன்வாடி பணியாளர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள், நீங்கள் வாக்களிக்க முடியாது. நீங்கள் கொண்டு வந்த ஆவணங்களில் உங்களுக்கு பணி ஆணை வழங்கிய சம்மந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளின் கையொப்பம் மற்றும் சீல் இல்லை என அதிகாரிகள் கூறிவிட்டனர். இதையறிந்த அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அவர்கள் கூறுகையில், ‘கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் பணியாற்றினோம்.