சேலம்: சேலத்தில் 13 வயது சிறுமியிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் மீதும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்தது. இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் காவல்நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருபவர் சரவணன். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது 13 வயது சிறுமி ஒருவர் மாநகர போலீசில் புகார் அளித்தார். அதில் போலீஸ்காரர் சரவணன் தன்னிடம் சிலுமிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. விசாரணையில் சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது.