அரூர்: அரூர் சாலையோரங்களில் விவசாய கருவிகள் தயாரித்து விற்பனை செய்யும் பணியில், உத்திரபிரதேச தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2மாதமாக பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் விவசாய கருவிகள் விற்பனையும் தீவிரமாக நடந்து வருகிறது. அரூர் கச்சேரிமேட்டில், உத்தரபிரதேச தொழிலாளர்கள் கூடாரம் அமைத்து குடும்பத்துடன் தங்கி, பழைய இரும்பு பட்டைகளை வாங்கி விவசாய கருவிகள் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.