குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மழையின் காரணமாக அனைத்து பகுதியும் பசுமையாக காணப்படுகிறது. இதனால் வன விலங்குகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைத்து வருகிறது. இதனால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகேயும், சாலையோர தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன.