காரிமங்கலம்: காரிமங்கலம் கொக்காண்டிகொட்டாய் வரசித்தி விநாயகர் மற்றும் கருமாரியம்மன கோயில் மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது.
காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சிக்குட்பட்ட கொக்காண்டிக் கொட்டாய் வரசித்தி விநாயகர் மற்றும் கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா, கடந்த 6ம் தேதி நடந்தது. இதையொட்டி கடந்த 24 நாட்களாக மண்டல பூஜை நடந்து வந்தது. மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று, விநாயகர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது.