மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த வருட மண்டல பூஜைகள் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் காலை மண்டல பூஜை நடந்தது.  தொடர்ந்து அன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.  மண்டல காலத்தில் சபரிமலையில் 160 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வந்திருந்தது. மீண்டும் மகர  விளக்கு பூஜைகளுக்காக நாளை (30ம் தேதி) மாலை 5 மணிக்கு கோயில் நடை  திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் நடக்காது. 31ம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் நடக்கும். ஜனவரி 15ம் தேதி மகரவிளக்கு பூஜை  நடைபெறும். அன்று மாலை  பொன்னம்பல மேட்டில் மகரவிளக்கு தெரியும்.

Related Stories: