தர்மபுரி: தர்மபுரி அருகே, பொதுக்கிணறை தூர்வாரி, இரும்பு கேட் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லம்பள்ளி ஒன்றியம் நார்த்தம்பட்டியில், சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நல்லம்பள்ளி மெயின்ரோடு அருகே பொதுக்கிணற்றில் எப்போதும் தண்ணீர் வற்றாமல் இருக்கும். இந்நிலையில் முறையாக பராமரிக்காததால், கிணற்றில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.