திருத்துறைப்பூண்டி: உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என முத்தரசன் கூறினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சியில் குடும்பத்தினருடன் வாக்களித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மூன்றாண்டு காலமாக தேர்தலை நடத்தாமல் பொருத்தமில்லாத காரணங்களை கூறி தமிழக அரசு தொடர்ந்து தள்ளி வைத்தது. உச்சநீதிமன்ற நிர்பந்தம் காரணமாக தற்போது தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு 27மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.