சிறுநீரக தொற்றுநோய் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை

ஜோலார்பேட்டை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் கடந்த நவம்பர் மாதம் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு ஒரு மாத பரோலில் போலீசார் பாதுகாப்புடன் வீட்டுக்கு வந்தார். ஒரு மாத கால பரோல் முடிந்த நிலையில் அவரது தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனின் தந்தை உடல்நலக்குறைவால் சிகிச்சை பெறுவதற்காக கூடுதலாக ஒரு மாதம் பரோல் கேட்டு அரசுக்கு மனு அளித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழக அரசு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீடித்தது. இந்நிலையில் பேரறிவாளன் தனது வீட்டில் இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு சிறுநீரக தொற்று நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதனால்  வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் மீண்டும் மதியம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது  வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.

Related Stories: