புதுக்கோட்டை: 17 வயது வாய்பேச முடியாத சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 15 லட்சம் இழப்பீடு தமிழக அரசு தரவேண்டும் என்றும் புதுக்கோட்டை மகிளா கோர்ட் உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த 17 வயது வாய்பேச முடியாத சிறுமியை அதே பகுதியை சேர்ந்த வீரையா என்ற பொட்டையன் (40) என்பவர் கடந்த 8.1.18ல் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.