பெங்களூரு: கர்நாடகாவில் 114 அடி உயர இயேசு கிறிஸ்துவின் சிலை அமைக்க, முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் அடிக்கல் நாட்டியதற்கு பாஜ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள்து., கர்நாடக மாநில காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர்டி.கே.சிவகுமார். முன்னாள் அமைச்சரும் கூட. அரசியலுடன் கல்வி, தொழிற்சாலைகள் நடத்தி வருவதின் மூலம் தொழிலதிபராகவும் உள்ளார். இந்நிலையில், இம்மாநிலத்தில் உள்ள ராம்நகரம் மாவட்டம், ஹாேரபெலலே கிராமத்தில் தனது சொந்த செலவில் இயேசு கிறிஸ்துவின் 114 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்க, கடந்த 25ம் தேதி அடிக்கல் நாட்டினார். ஓராண்டுக்குள் சிலை அமைக்கும் பணி முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிவகுமாரின் இந்த முயற்சியை பலர் வரவேற்றுள்ள நிலையில், பாஜ தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.