பத்ராவதி: நல்ல பாம்பை முத்தமிட முயன்ற பாம்பு பிடாரனின் உதட்டை பாம்பு கடித்து குதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் பத்ராவதியில் ஒரு வீட்டில் நல்லபாம்பு புகுந்தது. இது குறித்து பாம்பு பிடாரன் சோனு என்பவருக்கு தவகல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து பாம்பை பிடித்து சிறிது நேரம் விளையாட்டு காட்டினார். பிறகு பாம்பின் முன் பக்கம் உதட்டோடு உதடாக முத்தமிட முயன்றார். அப்போது பாம்பு அவர் உதட்டை கடித்து பதம்பார்த்துவிட்டது.