திருவண்ணாமலை: சூரியகிரகணத்தையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் இன்று தீர்த்தவாரி நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆகம விதிகளின்படி சந்திர கிரகணத்தின்போது கிரகணம் முடிந்ததும், சூரிய கிரகணத்தின்போது கிரகணம் தொடங்கும் முன்பும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். கிரகண நேரத்தில் கோயில் நடை அடைப்பதில்லை. சூரிய கிரகணம் இன்று காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.19மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டதும் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.