இலங்கை சுதந்திர தினம் - சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம், தமிழில் இசைக்கப்படாது என தகவல்

கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது எனவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பழமொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் உள்ளது என்று இலங்கை அமைச்சர் கூறியுள்ளார். இலங்கையிலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் கூறியுள்ளார்.

Related Stories: