நைஜீரிய கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர் மீட்பு

அபுஜா: நைஜீரிய கடற்கரைக்கு அருகே ஹாங்காங் கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கடந்த 3ம் தேதி எம்டி நேவ் கான்ஸ்டாலேஷன் என்ற ஹாங்காங் கப்பலில் இருந்து பணயக்கைதியாக 18 இந்தியர்கள் கடற்கொள்ளையர்களால் நைஜீரிய கடல்பகுதியில் கடத்திச் செல்லப்பட்டனர். இந்நிலையில், 18 இந்தியர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக  நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதை கடல்சார் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் உலகளாவிய நிறுவனமான ஏஆர்எக்ஸ் வெளியிட்ட செய்தியில் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: