ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக-காங்கிரஸ் இடையே இழுப்பறி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே இழுப்பறி நீடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் காங்கிரஸ் கூட்டணி 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனைபோல் பாஜக 34 இடங்களில், ஜேவிஎம் 5 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்றவை 3 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஆனால், காங்கிரஸ், பாஜக மாறி மாறி முன்னிலை வருவதால் இழுப்பறி நீடித்து வருகிறது.

Related Stories: