பெங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பிய வாலிபரை 4 பேர் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். பெங்களூரு ஜே.பிநகரை சேர்ந்தவர் வருண். நேற்று காலை இவர், பெங்களூரு டவுன் ஹால் பகுதியில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு சிறிது நேரம் போராடிய அவர், கூட்டம் முடிந்ததும், அங்கிருந்து வீ்ட்டிற்கு தனியாக நடந்து சென்றார். கலாசிபாளையம் சரகத்திற்குட்பட்ட ஜே.சிரோடு பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த 4 பேர் கும்பல் இவரை வழிமறித்து கத்தியால் தாக்கிவிட்டு சென்றனர்.