சென்னை: தேனாம்பேட்டை அண்ணாசாலை எஸ்ஐஇடி கல்லூரி அருகே கார் விற்பனை ஷோரூமில், சென்னை மாநகராட்சி கான்ட்ராக்டர் துரைப்பாக்கம், சாய் நகரை சேர்ந்த சரவணன் (43) என்பவர், கடந்த 45 நாட்களுக்கு முன் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிய கார் புக்கிங் செய்துள்ளார். கடந்த வாரம் காரை டெலிவரி செய்துள்ளனர். அதன்பிறகு, ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு எண் பெற்று தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதுபற்றி, கார் ஷோரூமில் கேட்டபோது, ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், கான்ட்ராக்டர் சரவணன் நேற்று தனது நண்பர்களுடன் நேரில் சென்று ஷோரூம் விற்பனை பிரிவு மேலாளரிடம் முறையிட்டபோது, அவர் அலட்சிய போக்குடன் பதிலளித்ததாக கூறப்படுகிறது.