உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு

மதுரை: உள்ளாட்சி தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் உள்ளதுபோல உள்ளாட்சித் தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்களிக்க வசதி வேண்டும் என மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories: