திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் ஒன்றியம், பொன்னமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள வீரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர், கருமாத்தூரில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள். ஆனந்தன் பொன்னமங்கலம் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவரை எதிர்த்து யாரும் மனு செய்யாததால், ஆனந்தன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தகவலறிந்த ஆனந்தன் மகிழ்ச்சியடைந்து பொன்னமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு நேற்றுமுன்தினம் மாலை சென்றார்.