தேனி: சோத்துப்பாறை அணையில் 78 நாட்களாக முழு கொள்ளளவில் நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் சோத்துப்பாறை அணை தொடர்ந்து 78-வது நாளாக தண்ணீர் நிரம்பி வழிகிறது. தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணை 126.28 அடி மொத்த உயரம் கொண்டது. மேற்குதொடர்ச்சி மலை, மற்றும் கொடைக்கானலில் பெய்த தொடர் மழையால் கடந்த நவம்பர் மாதம் அணை நிரம்பியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 42 கனஅடி நீர் வரும் நிலையில் அது முழுமையாக ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.