டெல்லி: டெல்லியில் நேற்று மோதல் ஏற்பட்ட சீலாம்பூர், ஜாபராபாத் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் - போலீஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த மோதல் காரணமாக டெல்லியின் முக்கிய இடங்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்து நடைபெற்ற போராட்டத்தின் போது சீலபம்பூர் காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு்ள்ளன. போராட்டக்காரர்களை பறக்கும் கேமராக்களை இயக்கி போலீஸ் கண்காணித்து வந்தனர்.