சிரியா: சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வேறு இடங்களை தேடி தஞ்சம் புகுந்தனர். சிரியாவின் இத்லிப் பகுதியில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய போராளி குழுக்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. எனினும், இந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வருவோம் என சிரிய அரசு தொடர்ந்து உறுதி கூறி நடவடிக்கை எடுத்து வருகிறது.இப்பகுதியில் கடந்த ஏப்ரலில் நடந்த அரசு ஆதரவு படைகளின் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமக்கள் கொல்லப்பட்டனர்.