கோவை: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்று தொடங்கியது. இதில் 26 கோயில் யானைகள் பங்கேற்றன.இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான புத்துணர்வு முகாம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நேற்று காலை தொடங்கியது. முகாமுக்கான செலவாக தமிழக அரசு ₹1.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, 6 ஏக்கர் நிலப்பரப்பில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நிர்வாக அலுவலகம், பாகன்கள் தங்குமிடம், ஓய்வறை, தீவனமேடை, சமையல் கூடம், பாகன்கள் மற்றும் யானைகளுக்கான கொட்டகை, யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை, குளியல் மேடை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமுக்குள் காட்டு யானைகள் நுழைந்துவிடும் என்பதால் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முகாமை சுற்றிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது.
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கியது: 26 யானைகள் பங்கேற்பு
- யானைகள் புத்துயிர் முகாம்
- Thekkampatti
- கோயம்புத்தூர்
- 26 யானைகள் பங்கேற்பு யானைகள் புத்துயிர் முகாம்