சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: அதிமுகவுடன் கூட்டணி கட்சிகளான நாங்கள் உள்ளாட்சி தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. குடியேற்ற மசோதாவை பொறுத்தவரை எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின்பு இதைப்போன்ற மாற்றங்களை கொண்டுவர வேண்டும். இதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு ‘இலங்கை தமிழர்கள் பிரசசனையை பொறுத்தவரை இந்திய அரசு கூறியதைப்போல் இலங்கை தமிழர்கள், தமிழகத்தை பாதுகாப்பான மாநிலமாக கருதினால் தமிழகத்தில் இருக்கலாம்.