முக்கிய செய்தி அரசியல் நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்! Dec 13, 2019 பஞ்சாயத்து சபைத் தலைவர் நீடமங்கலம் யூனியன் திருவாரூர் மாவட்டம் திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடமேலையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ரூ.2 லட்சத்தில் தொடங்கிய ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலம் ரூ.15 லட்சத்தில் முடிவடைந்தது. ஏலம் முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சித்ரா ராமசந்திரன் என்பவர் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார். பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எடமேலையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான ஏலத்தில், பெண் வேட்பாளர்களின் கணவர்கள் பங்கேற்றனர். ஊராட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான நபரை ஏலம் தேர்ந்தெடுத்தனர். உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்தும் ஏலம் விடுவது தொடர்கிறது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூரில் ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்பட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உறுப்பினர் பதவி, முருகன் என்பவருக்கு ரூ.14 லட்சத்துக்கும், ஊராட்சித்தலைவர் பதவி, ரெங்கராஜ் என்பவருக்கு ரூ.10 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆனந்த் என்பவருககு ஒன்றிய துணைத்தலைவர் பதவி ரூ.2.92 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டதாக ஒன்றிய தேர்தல் வார்டு அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவை தொகுதிகளில் நடைபெற்ற 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் வழக்கு: மே 7ம் தேதி குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் ஆணை!!
பிரதமர் மோடி இன்னும் ஓரிரு நாட்களில் மேடையில் கண்ணீர் விட்டு அழுவதை பார்க்கலாம்: ராகுல் காந்தி விமர்சனம்
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை!!
இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.வீரமணி சாடல்
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்ற பாஜக வேட்பாளரிடம் இருந்து ரூ.4.8 கோடி பறிமுதல்; போலீஸ் விசாரணை..!!
வட தமிழக உள் மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் ஏப்.29ம் தேதிக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு..!!
மக்களுக்கு ஓர் ஜில் அறிவிப்பு!: மே மாதத்தின் முதல் 2 வாரங்களில் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..பிரதீப்ஜான் கணிப்பு..!!
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
சேலம் சூரமங்கலத்தில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி; மோர், தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மக்களுக்கு வழங்கினார்..!!
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040க்கு விற்பனை.! பொதுமக்கள் அதிர்ச்சி