திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தெப்பல் உற்சவத்தின் முதல்நாளான நேற்றிரவு சந்திரசேகரர் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலையில் விமரிசையாக நடந்த கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ம் நாளான நேற்றுமுன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருவிழா உற்சவம் முடிந்ததும், 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.