மதுரை: மதுரை ஆவினில் போலியாக பால் அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில், கண்காணிப்பாளர் உள்பட 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை, ஆவின் பழங்காநத்தம் தெற்கு மண்டலத்தில் சிறப்பு கண்காணிப்பாளராக பணியாற்றிவர் முத்துநாயகம். இவரது அலுவலகத்தில் முதுநிலை பணியாளராக பணியாற்றியவர் உமாதேவி. இவர்கள் இருவரும் ேசர்ந்து போலியாக பால் அட்டை தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.