பீட்: நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொன்ற கணவன், உடலை துண்டு துண்டாக வெட்டி பத்து நாட்களாக வீட்டில் இருந்த ப்ரிட்ஜில் வைத்திருந்தார். அதன் பிறகு உடல் பாகங்களை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் எரித்தபோது போலீசில் சிக்கினார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் உள்ள மாஜல்நகரைச் சேர்ந்தவர் சஞ்சய் சால்வே(என்கிற) அப்துல் ரஹ்மான். இவரது மனைவி ரேஷ்மா பட்டான். வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு சஞ்சய் சால்வேயின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அந்த எதிர்ப்பை மீறி சஞ்சய் சால்வே முஸ்லிம் மதத்துக்கு மாறி தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றி ரேஷ்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த நிலையில், ரேஷ்மாவின் நடத்தை மீது சஞ்சய் சால்வேக்கு சந்தேகம் ஏற்பட்டது. வேறு ஒருவருடன் ரேஷ்மாவுக்கு கள்ளத் தொடர்பு இருப்பதாக அவர் சந்தேகப்பட்டார்.