கன்னியாகுமரி: மார்பக புற்றுநோயை எளிதில் கண்டறிவதற்கான எம்.இ என்ற நவீன மருத்துவமனை நாகர்கோவிலில் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக புற்றுநோயை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெட்டூர்ணிமடம் பகுதியில் பெண்களுக்கான புற்றுநோய்களை கண்டறிவதற்காக எம்.இ என்ற நவீன மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை மருத்துவர்களான சிவா, வைஷ்ணவதேவி ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு 3டி டைமோ சின்டஸிஸ் டிஜிட்டல் மெமோ கிராம் சிஸ்டம் எனும் புதிய கருவி நிறுவப்பட்டுள்ளது. வியாபர நோக்கில் இல்லாமல், சேவை நோக்கத்தோடு இந்த மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.