ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நகரப்பாடியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 6 ம்தேதி (வெள்ளிக்கிழமை) விக்னேஷ்வர பூஜை, கனபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. 7ம்தேதி (சனிக்கிழமை) கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதற்கால பூஜை, தீபாராதனை நடைபெற்றது.