தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பருவமழை கைகொடுத்ததையடுத்து நிலக்கடலை மகசூல் அதிகரித்ததால் படி ரூ40க்கு விற்பனையாகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, மொரப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம், பென்னாகரம், நல்லம்பள்ளி உள்பட 8 ஒன்றியங்களிலும் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர் நிலக்கடலையாகும். தர்மபுரி மாவட்டத்தில் நிலக்கடலை தென்மேற்கு பருவமழையை நம்பி வைகாசி பட்டத்தில்(மே மற்றும் ஜூன் மாதங்களில்) நடவு செய்யப்படும். இதேபோல், வடகிழக்கு பருவமழையை நம்பி அக்டோபர், நவம்பர் மாதத்தில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும். மாவட்டம் முழுவதும் மானாவாரியாக நிலக்கடலை சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது.