சென்னை: இடஒதுக்கீடு, வார்டுவரையறையை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. திமுக சார்பில் அமைப்பு ெசயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி மாநில தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு ஒன்றை அளித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டி: உச்ச நீதிமன்றம் நேற்றைய முன்தினம் வழங்கியிருக்கிற தீர்ப்பினை முழுமையாக பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்களுக்கு சரியாக போய் சேரவில்லை. அதை விளக்குகின்ற வகையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் 9 மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த கூடாது என்பது மட்டுமல்ல, எஞ்சியிருக்கிற மாவட்டங்களுக்கும் ஏற்கனவே வகுக்கப்பட்டிருக்கிற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.