விழுப்புரம் மதுவிலக்குஅமல்பிரிவு அதிகாரியாக கோவன அதிகாரி உள்ளார். ஏற்கனவே இதே மாவட்டத்தில் பல இடங்களில் பணியாற்றியவர், ஓய்வுபெறும் நிலையில் கல்லாகட்டும் துறையை தேடிபிடிச்சி வாங்கியிருக்காறாம். புதுவை அருகே திருசிற்றம்பலம் கூட்டுரோட்டில் வீடுகட்டியுள்ள அவர் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கித்தரும் பொறுப்பை ஒவ்வொரு செக்போஸ்ட்டிற்கும் பிரித்து கொடுத்துள்ளாராம். காய்கறி, மளிகைசாமான், மீன் என்று வாரந்தோறும் பட்டியல் போட்டு கொடுத்துள்ளாராம். இந்நிலையில் கிளியனூர் செக்போஸ்ட் ஏட்டை அழைத்து வீட்டுக்கு காய்கறி வாங்கிவைப்பான்னு சொல்லிட்டு அதிகாரி சென்றுவிட்டாராம்.